- எச்சண்டா வாவோ
- மதுரை
- VAO இரண்டும்
- கருப்புசாமி
- பொயசாமிபுரம்
- சங்கரன்கோ, தென்காசி மாவட்டம்
- ஈச்சந்தா
- கிராம
- விஜயகுமார்
- எச்சண்டா
மதுரை, மே 10: பட்டா வழங்க லஞ்சம் வாங்கி கைதான விஏஓவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள பொியசாமிபுரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய ஈச்சந்தா கிராம விஏஓ விஜயகுமார் ரூ.13 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. லஞ்ச பணத்தை வாங்கியபோது விஏஓ விஜயகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் ேகாரி விஜயகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல்குத்தூஸ், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மறு உத்தரவு வரும் வரை லஞ்ச ஒழிப்பு போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
The post பட்டா வழங்க லஞ்சம் ஈச்சந்தா விஏஓவுக்கு நிபந்தனை ஜாமீன் appeared first on Dinakaran.