×

குளத்தில் மூழ்கி சகோதரிகள் பலி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி பரமார்த்தலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் குமார். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கிறிஸ்டா. இந்த தம்பதிக்கு பிரியா (14) மற்றும் ஷிவாலி (12) என்ற 2 மகள்கள். கொட்டாரம் அரசு பள்ளியில் பிரியா 9ம் வகுப்பும், ஷிவாலி 7ம் வகுப்பும் படித்து வந்தனர். நேற்று காலை சுமார் 7 மணியளவில் பிரியா தனது தங்கை ஷிவாலியை அழைத்துக்கொண்டு மாகாதானபுரம் பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்கு வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு, 2 பேரும் பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டுவிட்டு கைகழுவுவதற்காக கோயில் அருகே உள்ள தெப்ப குளத்துக்கு 2 பேரும் சென்றனர். கைக்கழுவிக்கொண்டிருந்தபோது படிகளில் இருந்த பாசியால் கால் தவறி 2 பேரும் குளத்திற்குள் விழுந்தனர். அந்த நேரத்தில் அங்கு யாருமே இல்லாததால் சிறுமிகளின் கதறியும் உதவிக்கு யாரும் வரவில்லை. இதனால் சிறுமிகள் 2 பேரும் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

The post குளத்தில் மூழ்கி சகோதரிகள் பலி appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Rajesh Kumar ,Paramarthalingapuram ,Krista ,Priya ,Shivali ,Kottaram Government School ,
× RELATED குமரி அருகே குளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு..!!