×

டூவீலர் மீது டிராக்டர் மோதி விவசாயி பலி

கிருஷ்ணகிரி, மே 9: காவேரிப்பட்டணம் அடுத்த கருக்கன்சாவடி கவுண்டன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார்(40), விவசாயி. இவர் கடந்த 5ம் தேதி இரவு டூவீலரில் காவேரிப்பட்டணம்-பாலக்கோடு சாலையில் கருக்கன்சாவடி தனியார் பள்ளி அருகே சென்றுக்கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிராக்டர் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இதுபற்றி காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலர் மீது டிராக்டர் மோதி விவசாயி பலி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Anand Kumar ,Kauntankottai ,Karukkanchavadi ,Kaveripatnam ,Karukkanchavadi Private School ,Kaveripatnam-Palakodu road ,Dinakaran ,
× RELATED மதுபோதையில் தந்தையைக் கத்தியால் குத்திக் கொலை செய்த மகன் கைது