×

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 150 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது: காங். தலைவர் ராகுல் காந்தி பேச்சு

போபால்: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 150 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது என்று காங். தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி அரசியலமைப்பை தூக்கி எறிய விரும்புகிறார். அவர் மட்டுமே ஆட்சி செய்ய விரும்புகிறார். உங்களின் அனைத்து உரிமைகளையும் பறிக்க விரும்புகிறார். இதுவே அவர்களின் குறிக்கோள். அரசியல் சட்டத்தை மாற்றுவோம் என்று பங்கிரங்கமாகவே பாஜகவினர் பேசினர். ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகள் பெறும் அனைத்து உரிமைகளுக்கும் அரசியலமைப்புச் சட்டம் காரணமாகும்.

ஆட்சிக்கு வந்தால் இந்தப் புத்தகத்தை ஒதுக்கி வைப்போம் என்று பாஜக தலைவர்கள் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். 400 இடங்களை கைப்பற்றுவோம் என்ற பாஜகவினரின் முழக்கமெல்லாம் கிடக்கட்டும், 150 இடங்களை கைப்பற்றுவதே பாஜகவுக்கு கடினம். 20 நாட்களுக்கு முன் பாஜக 180 இடங்களில் வெற்றி பெறும் என நினைத்தேன், ஆனால் இப்போது 150 இடங்கள் கிடைப்பதே கடினம் என விமர்சனம் செய்தார். காங்கிரஸ் கூட்டணி அனைத்து இடங்களிலும் முன்னேறி வருவதாக தமக்கு தகவல் கிடைத்து வருவதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

இந்திய அரசியல் சட்டத்தை கிழித்து எறியவே ஆர்.எஸ்.எஸ். இயக்கம் விரும்புவதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். காங்கிரசும், இந்தியா கூட்டணிக் கட்சிகளும் அரசியல் சட்டத்தை பாதுகாக்க ஒன்றுசேர்ந்துள்ளோம். நீதிமன்றம் அமல்படுத்திய 50% வரம்பை நீக்குவோம். தலித்துகள், ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைகளுக்கு தேவையான இடஒதுக்கீடு தொகையை வழங்குவோம் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

 

The post நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 150 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது: காங். தலைவர் ராகுல் காந்தி பேச்சு appeared first on Dinakaran.

Tags : BJP ,Congress ,President ,Rahul Gandhi ,Bhopal ,Madhya Pradesh ,Modi ,
× RELATED இடஒதுக்கீடு தொடர்பாக கர்நாடக பாஜக...