×

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எடப்பாடி வாழ்த்து

சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

வாழ்வின் அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் நீங்கள், உயர் கல்வி படிப்பிலும் சிறந்து விளங்கி, தங்கள் பெற்றோருக்கும், நாட்டிற்கும் நற்பெருமை சேர்க்கும் விதத்தில் பல்வேறு சாதனைகளை புரிய எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எடப்பாடி வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Edappadi Palaniswami ,AIADMK ,General Secretary ,Tamil Nadu ,
× RELATED முத்திரைக்கட்டணம் உயர்வு அரசாணையை...