×

தூத்துக்குடி மருத்துவர் வெற்றி

தூத்துக்குடி, மே 4: குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்று 143வது இடம் பிடித்த தூத்துக்குடி மருத்துவர் நித்திலா பிரியந்திக்கு தூத்துக்குடி கலெக்டர் லட்சுமிபதி புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். 2023-ம் ஆண்டு நடைபெற்ற மத்திய அரசின் குடிமைப்பணி தேர்வில் தூத்துக்குடி பிரையண்ட்நகரைச் சேர்ந்த மருத்துவர் நித்திலாபிரியந்தி வெற்றி பெற்று, அகில இந்திய அளவில் 143வது இடம் பிடித்தார். அவருக்கு தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் லட்சுமிபதி புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் மற்றும் மருத்துவரின் பெற்றோர்கள் சுபாஷ் சந்திரபோஸ், திலகா ஆகியோர் உடனிருந்தனர்.

The post தூத்துக்குடி மருத்துவர் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Collector ,Lakshmipathi ,Nithila Priyanthi ,government ,
× RELATED தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும்...