×

இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து

சென்னை: இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, அடக்குமுறை, அச்சுறுத்தல், தாக்குதல் என பல்வேறு இக்கட்டான சூழல்களிலும் துணிச்சலுடன் பணியாற்றி

மக்களுக்கான நடுநிலை செய்திகளை வழங்கி வரும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கருத்து சுதந்திரத்தின் முக்கியத்துவம் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்நாளில், உலக நாடுகளை செய்திகள் மூலம் இணைக்கும் பாலமாக செயல்படும் பத்திரிகை மற்றும் ஊடகங்களின் சுதந்திரத்தை பேணி காக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்.

The post இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : DTV Dinakaran ,CHENNAI ,AMUKA ,DTV ,Dinakaran ,
× RELATED கோடை வெப்பத்தையொட்டி குடிநீர்,...