×

ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு

 

சிவகங்கை,மே 3: இலங்கையில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்ற வீரர்களுக்கு வீர தமிழர் வடமாடு பேரவை சார்பில் பாராட்டு தெரிவித்தனர். இலங்கையில் ஏப்.27, 28ல் நடைபெற்ற சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் சிவகங்கையைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்களில், 14 வயது பிரிவில் காஞ்சி லக்சியா, 17 வயதுக்குள்பட்டோர் பிரிவில் காஞ்சி ரித்தீஷ், தீபன் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

இதையடுத்து வீர தமிழர் வடமாடு பேரவை ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகரன் ஆலோசனைப்படி, சிவகங்கை காமராஜர் காலனியில் வீர தமிழர் வடமாடு பேரவை மாநில துணைப் பொதுச் செயலாளர் காஞ்சி செல்வம் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் கௌரவ தலைவர் தங்கராஜ், மாநில பொதுச்செயலாளர் மாரிமுத்து, மாநில ஒருங்கிணைப்பாளர் கேசவன் ஆகியோர் கலந்து கொண்டு ஸ்கேட்டிங்கில் தங்கம் வென்ற வீரர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினர். இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Veera Tamils Vadamadu Association ,Sri Lanka ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியம் பெற இ-சேவை மையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்