×

மானகிரியில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே மானகிரி-தளக்காவூர் இளைஞர்கள் சார்பில் நேற்று மாலை இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.பெரியமாடு பிரிவில் 20 ஜோடிகள் பங்கேற்றன. அதில் கம்பம் அழகுபிள்ளை முதல் இடத்தையும், பரளி சித்தார்த் இரண்டாம் இடத்தையும், மேலூர் அருகே நொண்டிக்கோயில்பட்டி துரைப்பாண்டி மூன்றாம் இடத்தையும், அவனியாபுரம் மோகன் நான்காம் இடத்தையும் வென்றனர். சின்னமாடு பிரிவில் 49 ஜோடிகள் பங்கேற்றன. இது இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது. முதல் பிரிவில், நட்டரசன்கோட்டை ஆண்டிகோனார் முதல் இடத்தையும், சொக்கம்பட்டி செந்தில் இரண்டாம் இடத்தையும், காரைக்குடி சிவா மூன்றாம் இடத்தையும், திருப்பனவாசல் சுப்பையா நான்காம் இடத்தையும் வென்றனர். இரண்டாம் பிரிவில், குப்பச்சிப்பட்டி வயிரம் முதல்  இடத்தையும், கல்லூரணி பாலாஜி இரண்டாம் இடத்தையும், மலம்பட்டி காயத்திரி மூன்றாம் இடத்தையும், புரண்டிபுதுக்குடி ராஜசேகர் நான்காம் இடத்தையும் வென்றனர். வெற்றி பெற்ற காளைகளுக்கு வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செலுத்தி பரிசுகள் வழங்கப்பட்டன….

The post மானகிரியில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம் appeared first on Dinakaran.

Tags : Managiri ,Tiruptur ,Managri- ,Tharkhavur ,Dinakaran ,
× RELATED திறன்மிக்க மாணவர்களை உருவாக்க வேண்டும்: இறையன்பு பேச்சு