×

ஆபாச வீடியோ விவகாரம்.. பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?: பிரியங்கா காந்தி கேள்வி..!!

டெல்லி : பாஜக கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல் விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பிரஜ்வால் ரேவண்ணா உதவி கேட்டு வந்த பெண்கள் பலரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியதாக புகார் எழுந்த நிலையில் அவை தொடர்பான விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது கர்நாடக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரஜ்வால் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை பிரஜ்வல் ரேவண்ணா சீரழித்துள்ளார். பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு தனிப்பட்ட முறையில் சென்று பரப்புரையிலும் மோடி ஈடுபட்டார். பாஜக கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? என்று பதிவிட்டுள்ளார்.

 

The post ஆபாச வீடியோ விவகாரம்.. பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?: பிரியங்கா காந்தி கேள்வி..!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Prajwal Revanna ,Priyanka Gandhi ,Delhi ,BJP ,Prajwal ,Congress ,Secretary General ,Devakavuda ,Karnataka ,Dinakaran ,
× RELATED அமித்ஷாவுக்கு பாஜ நிர்வாகி எழுதிய கடிதத்தை வெளியிட்டு ராகுல் பிரசாரம்