×

தண்டவாளம் பராமரிப்பு பணி மணியாச்சி, ஒட்டநத்தம் ரயில்வே கேட் இன்றும், நாளையும் பகுதிநேரம் மூடல்

 

தூத்துக்குடி, ஏப்.29: தண்டவாளத்தை பராமரிக்கும் பணி காரணமாக மணியாச்சி, ஒட்டநத்தம் ரயில்வே கேட்டுகள் இன்றும், நாளையும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மூடப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே அலுவலகத்தில் இருந்து வெளியிட்ட அறிவிப்பு: தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி ரயில் நிலையம் மற்றும் மணியாச்சி- ஒட்டநத்தம் சாலையில் உள்ள ரயில் நிலையம் என 469, 469 ஏ ஆகிய எண்கள் கொண்ட இரு ரயில்வே கேட்டுகளும் அவசர தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக இன்றும், நாளையும் (ஏப். 29, 30) ஆகிய இரு நாட்களும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மூடப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தண்டவாளம் பராமரிப்பு பணி மணியாச்சி, ஒட்டநத்தம் ரயில்வே கேட் இன்றும், நாளையும் பகுதிநேரம் மூடல் appeared first on Dinakaran.

Tags : Maniachi ,Ottanantham railway gate ,Thoothukudi ,Southern Railway ,Ottanantham ,Ottanantham railway ,Dinakaran ,
× RELATED வட்டார மருத்துவ அலுவலருக்கு பணி நிறைவு பாராட்டு விழா