×

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தவர் கைது

திருப்பரங்குன்றம், ஏப். 28: மதுரை. நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி முத்துமணி(35). இவர்களுடைய வீட்டின் அருகே வசிப்பவர் முத்துக்குமார்(35). இவர் நேற்று மணிகண்டன் வீட்டிற்குள் திடீரென புகுந்துள்ளார். அதுகுறித்து முத்துமணி கேட்டபோது, அவருடைய கணவர் எங்கே என, கேட்டு அவரை அவதூறாக பேசியுள்ளார். மேலும் முத்துமணியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர். திருமங்கலம் அருகே ராயபாளையத்தில் உள்ள பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தினை காண திரண்ட பக்தர்கள். உள்படம்: கோயில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்படுகிறது.

The post வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruparangunram ,Madurai ,Manikandan ,Pudukottai, Nagamalai ,Muthumani ,Muthukumar ,
× RELATED கிரிவலப் பாதையில் உள்ள செடி, கொடி, மரங்களில் திடீரென தீ!