×

தனது விவாகரத்து குறித்து மனம் திறந்து பேசிய சமந்தா

தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதல் திருமணம் செய்து, பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தவர் சமந்தா. தற்போது ‘சாகுந்தலம்’, விஜய் தேவரகொண்டா ஜோடியாக ‘குஷி’ ஆகிய பான் இந்தியா படங்களிலும், ‘சிட்டாடல்’ என்ற இந்தி வெப்ெதாடரிலும் நடிக்கும் அவர், தனது விவாகரத்து குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் விவாகரத்து செய்த சில நாட்களில், ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா மாமா’ என்ற பாடல் காட்சியில் நடனமாட அழைப்பு வந்தது. எதைப்பற்றியும் யோசிக்காமல் உடனே சம்மதித்தேன்.

அப்பாடலில் ஆட நான் ஒப்புக்கொண்டதை அறிந்த என் குடும்பத்தினர், செல்போனில் என்னை தொடர்புகொண்டு, ‘நீ வீட்டில் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தாலே போதும். இப்போதுதான் உன் கணவரை விவாகரத்து செய்திருக்கிறாய். இந்நிலையில், உடனே நீ குத்துப்பாடலுக்கு நடனமாடுவது சரியாக இருக்காது’ என்று அட்வைஸ் செய்தனர். எனக்கு எல்லா நிலையிலும் ஆதரவுக்கரம் நீட்டும் சில நண்பர்கள் கூட, அப்பாடல் காட்சியில் நான் நடிக்கக்கூடாது என்று சொன்னார்கள்.

ஆனால், யாருடைய பேச்சையும் நான் கேட்கவில்லை. காரணம், திருமண பந்தத்தில் நான் நூறு சதவிகிதம் நேர்மையாக இருந்தேன். அப்படி இருந்ததுதான் என் வாழ்க்கைக்கு சரிப்பட்டு வரவில்லை. அப்படி இருக்கும்போது, நான் ஏதோ மிகப்பெரிய தவறு செய்தவள் போல் எதற்காக ஒளிந்துகொள்ள வேண்டும்? நான் செய்யாத குற்றத்துக்காக, என்னை நானே வற்புறுத்திக்கொண்டு எதற்காக வருத்தப்பட வேண்டும்? ஏற்கனவே நிறைய வேதனைகளை அனுபவித்து விட்டேன்’ என்றார்.

Tags : Samantha ,Nagachaitanya ,Vijay Devarakonda ,
× RELATED பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா