×

End to End Encryption-ஐ உடைக்க இந்திய அரசு எங்களை கட்டாயப்படுத்தினால் நாட்டை விட்டு வெளியேற நேரிடும் : வாட்ஸ்அப் நிறுவனம் எச்சரிக்கை

டெல்லி : “வாட்ஸ்அப் பயனர்களின் தனியுரிமையை பாதிக்கும் வகையில் End to End Encryption-ஐ உடைக்க இந்திய அரசு எங்களை கட்டாயப் படுத்தினால், நாட்டை விட்டே இச்செயலி வெளியேற நேரிடும்” என டெல்லி உயர்நீதிமன்றத்தில் அந்நிறுவனம் வாதம் செய்துள்ளது. ஒன்றிய அரசின் புதிய IT விதிகளை எதிர்த்து தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இந்த வாதத்தை வாட்ஸ்அப் முன்வைத்துள்ளது. இந்த விதிகளின்படி குற்ற வழக்குகளின் விசாரணைக்காக அரசு கேட்கும்பட்சத்தில், Encryptionஐ உடைத்து பயனர்களின் CHAT தகவல்களை வாட்ஸ்அப் வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post End to End Encryption-ஐ உடைக்க இந்திய அரசு எங்களை கட்டாயப்படுத்தினால் நாட்டை விட்டு வெளியேற நேரிடும் : வாட்ஸ்அப் நிறுவனம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Indian government ,WhatsApp ,Delhi ,Delhi High Court ,Union Govt ,Dinakaran ,
× RELATED நெட் இல்லாமல் வாட்ஸ்அப்பில் தகவல்...