×

திருச்சி ஸ்ரீரங்கத்தில் சாலையில் மீண்டும் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு; போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்..!!

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தில் சாலையில் மீண்டும் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். திருச்சி திருவானைக்காவலில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் காந்தி ரோடு சாலை ரயில்வே மேம்பாலத்திற்கு முன்பாக திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்திற்கு கீழே பாதாள சாக்கடை உள்ளது. அந்த பாதாள சாக்கடையில் அதிக அடைப்பு மற்றும் கேஸ் வெளியேற்றம் காரணமாக குழாய் வெடித்து சாலையில் பள்ளம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த 10ம் தேதி இதே பகுதியில் 100 மீட்டருக்கு முன்பாக பாதாள சாக்கடையில் ஓட்டை விழுந்து, தற்காலிகமாக சரி செய்யப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக திருச்சி திருவானைக்காவல் வழியாக ஸ்ரீரங்கம் செல்லக்கூடிய போக்குவரத்தானது முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, ஸ்ரீரங்கத்திற்கு செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் மாம்பழச்சாலை அம்மாமண்டபம் வழியாக ஸ்ரீரங்கத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தற்போது பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் போக்குவரத்து மாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பள்ளத்தை சரிசெய்யும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

The post திருச்சி ஸ்ரீரங்கத்தில் சாலையில் மீண்டும் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு; போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்..!! appeared first on Dinakaran.

Tags : Trichy ,Srirangam ,Gandhi Road Road Railway ,Trichy Thiruvanaikaval ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...