×

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 6ம் தேதி உள்ளூர் விடுமுறை

திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 6ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மேலும் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம். ஸ்ரீரங்கம் “அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு வருகின்ற (06.05.2024) திங்கட்கிழமையன்று உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

இத்தேர்த்திருவிழாவினை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். எனினும் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது.

இந்த விடுமுறைக்குப் பதிலாக வருகின்ற (29.06.2024) சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்படுகிறது” என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

The post ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 6ம் தேதி உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Srirangam Aranganathar ,Chitrai Thar festival ,Swami Temple ,Tiruchi ,Srirangam ,Aranganathar ,Trichy District, ,Srirangam Circle ,Arulmigu ,Dinakaran ,Srirangam Aranganathar Swami Temple ,
× RELATED சூலத்தேவருடன் தேரில் எழுந்தருளினார்...