×

பெண்களின் தாலிக்கு ஆபத்து… பெண்களுக்கு வழங்கப்படும் தாய் வீட்டு சீதனத்தை பறிக்க காங்கிரஸ் திட்டம் : பிரதமர் மோடி மீண்டும் சர்ச்சை பேச்சு

டெல்லி : காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலிக்கு ஆபத்து ஏற்படும் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,”நாட்டின் நலனை விட மேலான விஷயம் வேறு எதுவும் இல்லை. என்பதே பாஜகவின் கண்ணோட்டம். பாஜகவின் ஆட்சியில் மட்டுமே நாட்டின் வளர்ச்சி சாத்தியமாக இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை குடும்ப நலனே முன்னிலைப்படுத்தப்படுகிறது. நாட்டு நலனில் அக்கறை இல்லாததால் நீண்ட நாட்களாக ராணுவத்தினர் முன்வைத்த ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாக அமல்படுத்தாமல் இருந்தது. அதே நேரத்தில் பாஜக தலைமையிலான அரசு பதவியேற்றத்துடன் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டம் அமல்படுத்தப்பட்டது. நாட்டு மக்களின் சொத்துக்களை எக்ஸ்ரே எடுத்து கணக்கிட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

மக்களின் சொத்துக்களை பறித்து தங்கள் வாக்கு வங்கிக்கு கொடுக்க காங்கிரஸ் கட்சி திட்டம் தீட்டியுள்ளது. 1985-ல் பரம்பரை சொத்துவரியை ரத்து செய்தவர் காங்கிரசின் ராஜீவ் காந்தி. இந்திராவின் சொத்துகளை தக்கவைக்க பரம்பரை சொத்துவரியை ராஜிவ்காந்தி ரத்து செய்தார். தங்கள் சொத்துகளை காப்பாற்றிவிட்டு தற்போது மக்கள் சொத்துகளை அபகரிக்க முயற்சிக்கிறார்கள். ஆட்சிக்கு வந்தால் பரம்பரை சொத்து வரியை அமல்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலிக்கு ஆபத்து ஏற்படும். பெண்களுக்கு வழங்கப்படும் தாய் வீட்டு சீதனத்தை பறிக்க காங்., திட்டம் தீட்டியுள்ளது. நாற்காலியை பிடிக்க காங்கிரஸ் மீண்டும் போராடுகிறது; அனைத்து வகை ஆட்டங்களையும் ஆடுகிறது. காங்கிரஸுக்கு குடும்பமே முக்கியம்; பாஜகவுக்கு நாட்டை விட பெரியது எதுவுமில்லை,”இவ்வாறு தெரிவித்தார்.

The post பெண்களின் தாலிக்கு ஆபத்து… பெண்களுக்கு வழங்கப்படும் தாய் வீட்டு சீதனத்தை பறிக்க காங்கிரஸ் திட்டம் : பிரதமர் மோடி மீண்டும் சர்ச்சை பேச்சு appeared first on Dinakaran.

Tags : Congress ,PM Modi ,Delhi ,Modi ,Madhya Pradesh ,
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?