×

சென்னையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை..!!

சென்னை: சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். வரும் கல்வி ஆண்டில் பள்ளி கல்வித்துறையில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது. 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், மே 6ல் தேதி தேர்வு முடிவு வெளியாகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் பள்ளிகளுக்கான விடுமுறையை நீட்டிப்பது தொடர்பாகவும் அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

The post சென்னையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : School Education Minister ,Anbil Mahesh ,Chennai ,Greenway ,
× RELATED கோடை விடுமுறைக்கு பின்...