×

திருக்கோவிலூர், நெல்லூரில் பயங்கரம்: இரு விபத்துகளில் 6 பேர் பலி

சென்னை: திருக்கோவிலூர், நெல்லூர் அருகே நடந்த இரு விபத்துகளில் 6 பேர் பலியானார்கள். திருவண்ணாமலையை சேர்ந்த ஜலாலுதின் (30) மற்றும் 20 பேர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு பல இடங்களை பார்த்து விட்டு மீண்டும் திருவண்ணாமலைக்கு புறப்பட்டனர். ஈரோடு குமாரசாமிபுரம் பகுதியை சேர்ந்த வடிவேல் (45), மோகன்ராஜ் (40), ஜோதி (30), அம்பிகாபதி (40), அவரது மகள் இந்துஜா (17), அனிதா (35) ஆகியோர் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்றுவிட்டு திரும்பி கொண்டிருந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த பொன்னியந்தல் பேருந்து நிறுத்தம் அருகே இன்று அதிகாலை 5.30 மணியளவில் வந்தபோது எதிர்பாராதவிதமாக காரும், வேனும் மோதி கொண்டன. இதில் வடிவேல், மோகன்ராஜ், ஜோதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர். இந்துஜா, அம்பிகாபதி, அனிதா ஆகியோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து போலீசார் விரைந்து வந்து 3 பேரையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மற்றொரு விபத்து: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் கொய்யாலகுடத்தை சேர்ந்தவர்கள் ேஜாதிகல்யாண் (34), ராஜி (38), குமார் (42). கவரிங் நகை வியாபாரிகள். அடிக்கடி சென்னைக்கு சென்று கவரிங் நகைகளை மொத்தமாக வாங்கி வந்து ஆந்திராவில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பேஷன் ஜூவல்லரிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். நேற்று வழக்கம்போல ஜோதிகல்யாண், ராஜி, குமார் மற்றும் 2 பேர் சென்னையில் கவரிங் நகைகளை வாங்கிவிட்டு காரில் ஆந்திராவுக்கு திரும்பினர். நள்ளிரவு நெல்லூர் மாவட்டம் காவலி அருகே உள்ள முசுனூர் சுங்கச்சாவடி வழியாக கார் சென்றது.

அப்போது முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது, எதிரே வந்த மற்றொரு லாரி பயங்கரமாக மோதியது. இதில் ஜோதிகல்யாண், ராஜி, குமார் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். படுகாயமடைந்த 2 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலறிந்து காவலி போலீசார் விரைந்து வந்து 3 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருக்கோவிலூர், நெல்லூரில் பயங்கரம்: இரு விபத்துகளில் 6 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Thirukovilur, Nellore ,Chennai ,Tirukovilur ,Nellore ,Jalaludin ,Thiruvannamalai ,Kodaikanal ,
× RELATED 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள்...