×

இரணியல் அருகே நள்ளிரவில் குளத்தில் கவிழ்ந்த லாரி

*டிரைவர், கிளீனர் காயம்

திங்கள்சந்தை : நாகர்கோவில் அருகே உள்ள மணிகட்டி பொட்டலில் இருந்து பிளாஸ்டிக் கயிறு மூடைகளை ஏற்றி கொண்டு லாரி ஒன்று திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை வினு (34) ஓடினார் . செந்தில்(32) என்பவர் கிளீனராக பணி புரிந்தார். நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் இரணியல் – ஆழ்வார்கோவில் அரசுமூடுகுளம் அருகே உள்ள வளைவான திருப்பத்தில் லாரி வந்து கொண்டிருந்தது.

அப்போது லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து குளத்துக்குள் பாய்ந்து குப்புற கவிழ்ந்தது. சத்தம் கேட்டு வந்த அந்த பகுதி பொதுமக்கள் காயம் அடைந்த டிரைவர், கிளீனர் ஆகியோரை மீட்டனர். உடனடியாக அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து இரணியல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post இரணியல் அருகே நள்ளிரவில் குளத்தில் கவிழ்ந்த லாரி appeared first on Dinakaran.

Tags : Iranial ,Manikatti Bottle ,Nagercoil ,Thiruvananthapuram ,Vinu ,Senthil ,Dinakaran ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...