×

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் எச்.டி.எஃப்.சி. வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் எச்.டி.எஃப்.சி. வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் ஜிஎல்பி புறவழிச்சாலையில் பழைய பத்திரப்பதிவு அலுவலகம் அருகே தனியார் எச்.டி.எஃப்.சி. வங்கி ஏடிஎம் இயங்கி வருகிறது. நள்ளிரவில் இந்த ஏடிஎம்-க்கு வந்த நபர் ஒருவர், ஏடிஎம் இயந்திரத்தை கல்லால் உடைக்க முயற்சி செய்துள்ளார்.

உசுர கொடுத்து உடைச்சும் ஒன்னும் தேறல என்று வெறும் கையோடு அந்த திருடன் சென்றுள்ளார். ஏடிஎம் இயந்திரத்தை கல்லால் உடைக்கும் சிசிடிவி காட்சிகளை கண்காணித்த பாதுகாப்பு அதிகாரி, இதுகுறித்து செங்குன்றம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த தகவலின் பேரில் செங்குன்றம் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். காவலர்களை கண்டதும் தப்பியோட முயற்சித்த நபரை காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து செங்குன்றம் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்தியதில், ஏடிஎம்-ஐ உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றவர் வடகரையை சேர்ந்த அலெக்ஸாண்டர் (40) என்பது தெரியவந்தது. தற்போது அலெக்ஸாண்டரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் எச்.டி.எஃப்.சி. வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : HDFC ,Thiruvallur District Senggunram ,Tiruvallur ,Senggunram, Tiruvallur district ,Thiruvallur District Sengunram GLP ,Bypass ,Tiruvallur District Senguntham HDFC ,
× RELATED ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: ஒருவர் கைது