×

திருக்கோவிலூர் அருகே இருவேறு இடங்களில் ஏற்பட்ட விபத்துகளில் பெண் உட்பட 4 பேர் பலி..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே இருவேறு இடங்களில் ஏற்பட்ட விபத்துகளில் பெண் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். கூத்தாண்டவர் கோயில் மற்றும் திருவண்ணாமலை சித்திரை பவுர்ணமியை தரிசித்துவிட்டு திரும்பிய 4 பேர் விபத்தில் பலியாகினர். பொன்னியந்தல் மெய்யூர் கிராமத்தில் காரும் வேனும் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் மோகன்ராஜ், வடிவேல் மற்றும் பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். குன்னத்தூரில் ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகன விபத்தில் சென்ற சின்னத்தம்பி என்பவர் உயிரிழந்தார்.

The post திருக்கோவிலூர் அருகே இருவேறு இடங்களில் ஏற்பட்ட விபத்துகளில் பெண் உட்பட 4 பேர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Thirukovilur ,Kallakurichi ,Tirukovilur ,Kallakurichi district ,Koothandavar Temple ,Tiruvannamalai Chitrai Poornami ,Meiyur ,Ponnianthal ,
× RELATED கிணற்றில் மூழ்கி அக்கா, தம்பி சாவு