×

விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகள் அமர இருக்கை ஒதுக்க வேண்டும் : டிஜிசிஏ உத்தரவு

டெல்லி : விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகள் அமர இருக்கை ஒதுக்க வேண்டும் என டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகள் பெற்றோர் அருகில் அமர இருக்கை ஒதுக்க வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது. விமான பயணத்தில் குழந்தைகள் பெற்றோர், பாதுகாவலர்களில் ஒருவரேனும் உடனிருப்பதை உறுதி செய்ய உத்தரவு வழிவகை செய்கிறது. தனது முந்தைய பரிந்துரைகளில் திருத்தம் செய்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகள் அமர இருக்கை ஒதுக்க வேண்டும் : டிஜிசிஏ உத்தரவு appeared first on Dinakaran.

Tags : DGCA ,Delhi ,Dinakaran ,
× RELATED 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு...