×

காவிரி உரிமையை மீட்க போராட்டம் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

 

பல்லடம், ஏப்.24: காவிரி உரிமையை மீட்க போராட்டம் நடத்தப்படும் என்று கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது: மத்தியில் ஆட்சி அமைந்ததும் மேகதாதுவில் அணை கட்டுவோம் அதற்காக தான் நீர்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளேன். இது தான் எங்கள் லட்சியம் என்று கர்நாடகா மாநில துணை முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இதன் வாயிலாக காவிரியின் மீதான தமிழக உரிமை பறிபோவது வெளிப்படையாக தெரிந்துள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டான் இதற்காக எந்தவிதமான கண்டனமும் தெரிவிக்கவில்லை. சிவக்குமாரின் கருத்துக்கு தமிழக முதல்வர் கண்டனம் தெரிவிக்க வேண்டும். காவிரி உரிமையை மீட்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஒட்டு மொத்த விவசாயிகளும் களமிறங்கி காவிரி உரிமையை மீட்கபோராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும். இவ்வாறு அவர் கூறினார்.

The post காவிரி உரிமையை மீட்க போராட்டம் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Non-Party Tamil Nadu Farmers Union ,Palladam ,Iswaran ,Tirupur ,Meghadatu ,
× RELATED திருநங்கையை தாக்கியவர் கைது