×

அவதூறு பேச்சு இந்து முன்னணி எஸ்பியிடம் புகார்

நாகர்கோவில், ஏப். 24: இந்து முன்னணி நாகர்கோவில் மாநகர தலைவர் தியாகராஜன், செயலாளர் சிவகுமார், பொருளாளர் தாரா பிரதீஷ் ஆகியோர் நேற்று எஸ்பியிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்டம் மணிக்கட்டிப்பொட்டல் கீழ உடையப்பன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த சுபன்(36) என்பவர் முகநூலில் ஹைதராபாத் பா.ஜனதா வேட்பாளர் மாலதி லதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தும், ராமரை அவமானப்படுத்தியும் பதிவிட்டுள்ளார்.அவதூறு பேசி வரும் சுபன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மீது கூறப்பட்டுள்ளது.

The post அவதூறு பேச்சு இந்து முன்னணி எஸ்பியிடம் புகார் appeared first on Dinakaran.

Tags : Hindu Front SP ,Nagercoil ,Hindu Paramana ,Mayor ,Thiagarajan ,Sivakumar ,Treasurer ,Tara Pratish ,SP ,Kumari district ,Manikattippotal ,Udeappan ,Dinakaran ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...