ஜெய்ப்பூர்: உண்மையைச் சொன்னதால் இந்தியா கூட்டணி கட்சிகள் அச்சம் அடைந்துள்ளன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரு நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானில் காங்கிரஸ் குறித்த சில உண்மைகளை நாட்டின் முன்வைத்தேன். நான் கூறிய உண்மையைக் கேட்டு காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி பீதியடைந்துள்ளது. இந்துக்களின் சொத்துகளை காங்கிரஸ் பங்கிட்டுக் கொடுக்கும் என உண்மையைத் தான் பேசினேன், காங்கிரஸை அம்பலப்படுத்திவிட்டதால் என்னை அவமதிக்கிறார்கள். தைரியம் இருந்தால் உண்மையை ஒப்புக்கொள்ளுங்கள் என காங்கிரஸுக்கு பிரதமர் மோடி சவால் விடுத்தார்.
The post உண்மையைச் சொன்னதால் இந்தியா கூட்டணி கட்சிகள் அச்சம் அடைந்துள்ளன: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு appeared first on Dinakaran.