×

கும்பகோணம் அருகே சோழன்மாளிகையில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் மர்ம சாவு

கும்பகோணம், ஏப்.23: கும்பகோணம் அருகே பட்டிஸ்வரத்தில் உள்ள திருச்சக்திமுற்றம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் சுமார் 10 ஆடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் தனது ஆடுகளை சோழன்மாளிகை அருகில் வயலில் மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார். இந்நிலையில் அன்று மதியம் தனது ஆடுகள் வாயில் நுரை தள்ளியபடி, வயிறு வீங்கிய நிலையில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடனே அப்பகுதிக்கு சென்று பார்த்த மகேந்திரன், தனது ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அதனைத்தொடர்ந்து பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் அங்கு வந்த பட்டீஸ்வரம் போலீசார் உயிரிழந்த ஆடுகளின் ரத்தம் உள்ளிட்டவைகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பரிசோதனையின் முடிவு வந்த பின்னர் தான் ஆடுகள் எதனால் இறந்தது? என தெரிய வரும் என்று தெரிவித்துள்ளனர். இதில் இறந்து போன நான்கு ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ.25 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கும்பகோணம் அருகே சோழன்மாளிகையில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் மர்ம சாவு appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Cholanmalikai ,Mahendran ,Thiruchashaktimuttam ,Pattiswaram ,Cholanmalika ,
× RELATED கும்பகோணம் பிரதான சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி