×

ஓட்டலுக்கு சென்றுவிட்டு வந்த பள்ளி மாணவன் மீது சரமாரி தாக்குதல் 4 பேர் மீது வழக்கு

புதுச்சேரி, ஏப். 23: புதுச்சேரி கோரிமேடு ஜிப்மர் வளாகம் 2வது குடியிருப்பில் வசிப்பவர் ஜெயபால் மகன் தீபக் (17). இவர் லாஸ்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 20ம் தேதி இரவு தீபக், அவரது நண்பர் சீனுவாசனுடன் ஜிப்மர் எதிரே உள்ள ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு டிபன் வாங்கி கொண்டு வெளியே வரும்போது, கோரிமேடு காமராஜ் நகரை சேர்ந்த தனுஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் மோதுவது போல் வந்துள்ளார். இதுகுறித்து தீபக் கேட்டதற்கு, அவரிடம் பிரச்னை செய்துள்ளார். பிறகு, இதனை பொருட்படுத்தாமல் கோரிமேடு பேருந்து நிறுத்தத்தில் விட்ட தனது இருசக்கர வாகனத்தை எடுக்க தீபக் சென்றுள்ளார்.

அப்போது, தனுஷ் மீண்டும் தீபக்கிடம் சென்று பிரச்னை செய்ததுடன் தகாத வார்த்தையால் திட்டி, அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அவருடன் இருந்த சந்தோஷ், அஸ்வின், தினேஷ் ஆகியோரும் சேர்ந்து தீபக்கை சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச்சென்றனர். இதில் பலத்த காயமடைந்த தீபக், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து கோரிமேடு காவல் நிலையத்தில் தீபக் அளித்த புகாரின் பேரில் தனுஷ், சந்தோஷ், அஸ்வின், தினேஷ் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஓட்டலுக்கு சென்றுவிட்டு வந்த பள்ளி மாணவன் மீது சரமாரி தாக்குதல் 4 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Deepak ,Jayapal ,Jibmar complex ,Korimedu ,Govt Higher Secondary School ,Laspettai ,Dinakaran ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு