×

மது விற்ற 8 பேர் கைது

நாமக்கல், ஏப்.23: நாமக்கல் மாவட்டத்தில், மகாவீர் ஜெயந்தி அன்று சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். மகாவீர் ஜெயந்தி நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், மற்றும் பார்கள் மூடவேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மீறி, மாவட்டத்தின் பல பகுதிகளில் சந்துகடைகளில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இதையறிந்த மாவட்ட எஸ்பி ராஜேஸ்கண்ணன், சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன்படி மாவட்ட மதுவிலக்கு போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சந்துகடைகளில் மது விற்பனை செய்த 8 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 161 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post மது விற்ற 8 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Mahavir Jayanti ,Namakkal district ,Tasmac ,Dinakaran ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...