×

காவிரி உரிமையை மீட்க போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

பல்லடம்,ஏப்.23: தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது: மத்தியில் ஆட்சி அமைந்ததும் மேகதாதுவில் அணை கட்டுவோம் அதற்காக தான் நீர்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளேன். இது தான் எங்கள் லட்சியம் என்று கர்நாடகா மாநில துணை முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இதன் வாயிலாக காவிரியின் மீதான தமிழக உரிமை பறிபோவது வெளிப்படையாக தெரிந்துள்ளது. சிவக்குமாரின் கருத்துக்கு தமிழக முதல்வர் கண்டனம் தெரிவிக்க வேண்டும். காவிரி உரிமையை மீட்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஒட்டு மொத்த விவசாயிகளும் களமிறங்கி காவிரி உரிமையை மீட்கவும்,தமிழக அரசுக்கு எதிராகவும் போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும் இவ்வாறு அவர் கூறினார்.

The post காவிரி உரிமையை மீட்க போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Farmers Union ,Palladam ,Iswaran ,Tirupur District ,President ,Tamil Nadu Farmers Association ,Meghadatu ,Minister of Water Resources ,Karnataka ,Deputy ,Chief Minister ,Sivakumar ,
× RELATED காவிரி உரிமையை மீட்க போராட்டம் கட்சி...