×

கடலூர் பெண் இறப்பு குறித்து பொய்யான தகவலை பரப்பிய புகாரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு..!!

சென்னை: கடலூர் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த பெண் இறப்பு குறித்து பொய்யான தகவலை பரப்பிய புகாரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் தேர்தல் அன்று கோமதி என்ற பெண் கொலை செய்யப்பட்டார். தேர்தலில் திமுகவிற்கு வாக்கு அளிக்காததால் பெண் கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் காணொளி பரவியது. இந்த சம்பவம் பரபரப்பான நிலையில், கடலூர் மாவட்ட காவல்துறையினர் இதுகுறித்து தீர விசாரித்து நேற்று விரிவான அறிக்கையை வெளியிட்டனர்.

போலீஸ் விசாரணையில், கோமதி குடும்பத்தினருக்கும், கலைமணி என்பவர் குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகவும், இதில் கலைமணி மீது ஏற்கனவே போலீசார் வழக்குப்பதிவு செய்துவந்த நிலையில், அந்த வழக்கை வாபஸ் செய்ய கோரி பலமுறை வற்புறுத்தியும், கோமதி குடும்பத்தினர் அதனை வாபஸ் வாங்காத காரணத்தினால் அன்று மீண்டும் ஏற்பட்ட தகறாரிலேயே கோமதி கொலை செய்யப்பட்டதாக தெரிவித்தனர். தேர்தலுக்கும், இந்த கொலைக்கும் எந்த தொடர்பும் கிடையாது, இதுகுறித்து தவறான காணொளி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இதனிடையே, பெண் கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் தவறான காணொளியை பரப்பியதாக வட இந்தியர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், பெண் இறப்பு குறித்து பொய்யான தகவலை பரப்பிய விவகாரத்தில் அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் கடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அண்ணாமலையை தொடர்ந்து அவதூறு பரப்பிய பாஜக ஆதரவாளர்கள் இருவர் மீதும் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post கடலூர் பெண் இறப்பு குறித்து பொய்யான தகவலை பரப்பிய புகாரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,president ,Annamalai ,Cuddalore ,CHENNAI ,Cuddalore Srimushnam ,Gomathi ,Sreemushnam ,DMK ,
× RELATED கோடையின் கொடுமை தணிக்க நீர்மோர்...