×

மகனுக்காக பிரசாரம் செய்த பாஜக அமைச்சரின் மூக்கு உடைப்பு: உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி

லக்னோ: மகனுக்காக பிரசாரம் செய்த உத்தரபிரதேச பாஜக அமைச்சரின் மூக்கை, அப்பகுதியை சேர்ந்த சிலர் உடைத்ததால் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உத்தரபிரதேச மாநில பாஜக அமைச்சர் சஞ்சய் நிஷாத்தின் மகன் பிரவீன் நிஷாத் சந்த், கபீர் நகர் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக சஞ்சய் நிஷாத் சென்றார்.

அப்போது கபீர் நகரில் பிரசாரம் மேற்கொண்டிருந்த போது, திடீரென சிலர் சஞ்சய் நிஷாத்தை தாக்கினர். அதனால் மூக்கில் காயம் ஏற்பட்டது. அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால், அவரை அங்கிருந்து மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மூக்கில் கட்டு போட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் மருத்துவமனையின் வெளியே அமர்ந்திருந்த அவர் கூறுகையில், ‘எனது மகனுக்காக பிரசாரம் செய்ய கபீர் நகருக்கு சென்றேன். அப்பகுதியை சேர்ந்த குறிப்பிட்ட சாதியினர், என் மீது தாக்குதல் நடத்தினர். அதனால் எனது மூக்கு உடைந்தது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

The post மகனுக்காக பிரசாரம் செய்த பாஜக அமைச்சரின் மூக்கு உடைப்பு: உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : BJP ,minister ,Uttar Pradesh ,Lucknow ,Praveen Nishad Chand ,Sanjay Nishad ,Kabir Nagar ,
× RELATED உ.பி பாஜக அரசை தலிபான் அரசு என்று கூறிய...