×

ரூ.2 ஆயிரம் கோடி மதுபான ஊழல் சட்டீஸ்கர் ஓய்வு ஐஏஎஸ் அதிகாரி கைது

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் ரூ.2 ஆயிரம் கோடி மதுபான ஊழலில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. சட்டீஸ்கரில் ரூ.2ஆயிரம் கோடிக்கு மதுபான ஊழல் நடந்ததுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இந்த வழக்கை பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்நிலையில்,மாநிலத்தில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அனில் டுடேஜா, அவரது மகன் யஷ் டுடேஜா ஆகியோரிடம் நேற்றுமுன்தினம் அமலாக்கத்துறை பல மணி நேரம் விசாரணை நடத்தி அவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்தது.

பின்னர் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அனில் டுடேஜாவை அமலாக்கத்துறை காவலில் எடுத்தது. விசாரணைக்கு பின் யஷ் டுடேஜாவை அமலாக்கத்துறை விடுவித்தது. சட்டீஸ்கர் தொழில் மற்றும் வர்த்தக துறை இணை செயலாளராக பதவி வகித்துள்ள அனில் டுடேஜா கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை ஏற்கனவே பதிவு செய்த எப்ஐஆரை உச்சநீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது.இதையடுத்து பொருளாதார குற்ற பிரிவு வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. பொருளாதார குற்ற பிரிவு புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறை இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளது.

The post ரூ.2 ஆயிரம் கோடி மதுபான ஊழல் சட்டீஸ்கர் ஓய்வு ஐஏஎஸ் அதிகாரி கைது appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh ,IAS ,Raipur ,Enforcement Directorate ,Dinakaran ,
× RELATED என்கவுன்டரில் நக்சல் பலி