×

பயமுறுத்தும் பாஜ அழிந்து விடும் இந்தியா கூட்டணியில் இருந்து விலக மறுத்ததால் ஹேமந்த் சோரன் கைது: காங். தலைவர் கார்கே குற்றச்சாட்டு

ராஞ்சி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி 31ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதை கண்டிக்கும் வகையில் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பாக மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்டு பேசினார். அப்போது, “இந்தியா கூட்டணியில் இருந்து வௌியேற மறுத்ததால்தான் ஹேமந்த் சோரனை கைது செய்துள்ளனர்.

துணிச்சல் மிக்க நபரான ஹேமந்த் சோரன், இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதை விட சிறைக்கு செல்வதேயே விரும்பினார். அதனால் அவர் சிறையில் உள்ளார். ஹேமந்த் சோரன், கெஜ்ரிவால் கைது மூலம் பாஜ இந்தியா கூட்டணியை பயமுறுத்த பார்க்கிறது. ஆனால் இந்தியா கூட்டணி அஞ்சாது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு, ராமர் கோயில் திறப்பு விழாக்களுக்கு பழங்குடியினத்தை சேர்ந்த குடியரசு தலைவர் முர்முவை பாஜ அழைக்கவில்லை. பழங்குடியினரை தொடர்ந்து அவமதிக்கும், அச்சுறுத்தும் பாஜ அழிந்து விடும். இந்த தேர்தலில் பாஜவுக்கு 150 இடங்கள்தான் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா பேசும் போது, “என் கணவரை கொல்ல சதி நடக்கிறது. கெஜ்ரிவாலின் உணவு சிசிடிவி கண்காணிப்பில் உள்ளது. சர்க்கரை நோயாளியான என் கணவருக்கு இன்சுலின் தராமல் அவரை சிறையிலேயே கொலை செய்ய சதி நடக்கிறது” என்று பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார். பொதுக்கூட்டத்தில் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் பேசுகையில், “ எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசை கவிழ்க்க பாஜ முயற்சிக்கிறது. ஆனால் ஜனநாயகம் தோல்வியடைய விட மாட்டோம். வரும் தேர்தலில் பாஜ வௌியேற்றப்படும்” என்று தெரிவித்தார்.

* ராகுலுக்கு திடீர் உடல்நலக்குறைவு
காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று டிவிட்டரில் பதிவிடுகையில்,மத்திய பிரதேச மாநிலம் சத்னாவில் நேற்று காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இதில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று உரையாற்றுவதாக இருந்தது. அதை தொடர்ந்து ராஞ்சியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் எதிர்க்கட்சி பேரணியிலும் அவர் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், நேற்று காலையில் ராகுலுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து 2 நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்ளவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

The post பயமுறுத்தும் பாஜ அழிந்து விடும் இந்தியா கூட்டணியில் இருந்து விலக மறுத்ததால் ஹேமந்த் சோரன் கைது: காங். தலைவர் கார்கே குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Hemant Soran ,India ,BJP ,Alliance ,President ,Gharke ,Ranchi ,Jharkhand ,Mukti Morcha ,Congress ,Dinakaran ,
× RELATED ஈமக்கிரியை நிகழ்ச்சி: ஜார்க்கண்ட்...