×

திருவாடானை அருகே டூவீலர் மீது கார் மோதி பேக்கரி ஊழியர் பலி: டிரைவர் கைது

 

திருவாடானை, ஏப். 21: திருவாடானை அருகே மங்களக்குடியை அடுத்த கம்பக்கோட்டையைச் சேர்ந்தவர் பாண்டித்துரை (45). தனியார் பேக்கரியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர், நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக தனது டூவீலரில் தேவகோட்டை- மங்களக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள குருந்தங்குடி பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த கார் திடீரென பாண்டித்துரை ஓட்டி வந்த டூவீலர் மீது நேருக்குநேர் மோதியது.

இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக திருவாடானை தாலுகா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து திருவாடானை போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரான சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஆர்.எம்.எம்.எல் வீதியைச் சேர்ந்த காளிமுத்தன் (58) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருவாடானை அருகே டூவீலர் மீது கார் மோதி பேக்கரி ஊழியர் பலி: டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Pandithurai ,Gampakottai ,Mangalakudi ,Devakottai-Mangalakudi ,
× RELATED சுட்டெரிக்கும் கோடை வெயிலால் ஐஸ் பார்கள் விற்பனை படுஜோர்