×

விளைச்சல் அதிகரிப்பால் முள்ளங்கி விலை குறைவு

 

அரூர், ஏப்.21:தர்மபுரி மாவட்டத்தில் அரூர், கம்பைநல்லூர், மொரப்பூர், பொம்மிடி உள்பட மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில், முள்ளங்கி பயிரிடப்பட்டுள்ளது. 3 மாத பயிரான முள்ளங்கி பயிரிட ஏக்கருக்கு ₹15 ஆயிரம் வரை செலவாகிறது. தற்போது முள்ளங்கி அறுவடை சீசன் என்பதால், வரத்து அதிகரித்துள்ளது.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘மொத்த விலையில் கிலோ ₹10க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ ₹15க்கு விற்கப்படுகிறது,’ என்றனர்.

 

The post விளைச்சல் அதிகரிப்பால் முள்ளங்கி விலை குறைவு appeared first on Dinakaran.

Tags : Aroor ,Dharmapuri district ,Aruro ,Campinallur ,Morapur ,Bommidi ,Dinakaran ,
× RELATED கோடுப்பட்டி வனப்பகுதியில் தண்ணீர் குடித்து குதூகலிக்கும் யானைகள்