- சென்னை திமுக
- முதல் அமைச்சர்
- ஸ்டாலின்
- சென்னை
- தயாநிதி மாறன்
- தமிழாச்சி தங்கபாண்டியன்
- கல்நதி வீரசாமி
- மு.கே ஸ்டாலின்
- சபா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சென்னை திமுக வேட்பாளர்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி ஆகியோர் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஒரே கட்டமாக நேற்று முன்தினம் நடந்தது. எந்தவித பிரச்னையும் இல்லாமல் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. மாநிலம் முழுவதும் 69.46 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
வடசென்னையில் 60.31 சதவீதம் வாக்குகளும், தென்சென்னையில் 54.27 சதவீதம் வாக்குகளும், மத்திய சென்னையில் 53.91 சதவீதம் வாக்குகளும் பதிவாகினது. இந்நிலையில் நேற்று காலை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், வடசென்னை தொகுதி திமுக ேவட்பாளர் கலாநிதி வீராசாமி ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்துகளையும் பெற்றுக்கொண்டனர். மேலும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக 3 வேட்பாளர்களும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
The post சென்னை திமுக வேட்பாளர்கள் முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து appeared first on Dinakaran.