×

ஜனநாயக கடமையாற்றிய வாக்காளர்களுக்கு நன்றி ராகுல், மு.க.ஸ்டாலின் பிரசாரம் மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தியது: செல்வப்பெருந்தகை அறிக்கை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் அமைதியாக 70 சதவிகித வாக்குப்பதிவுடன் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையே நடைபெற்ற தேர்தலில் தமிழக மக்கள் பெருவாரியாக இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் வகையில் வாக்களித்திருக்கிறார்கள் என்ற உறுதியான செய்தி மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

தமிழகத்தில் திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து செயல்பட்ட பெருமை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. இந்தியா கூட்டணியை சேர்ந்த மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் கொள்கை சார்ந்து வகுப்புவாத சக்திகளை வீழ்த்தும் நோக்கத்தில் கடுமையான பிரசாரத்தை மேற்கொண்டனர்.

தமிழ்நாட்டின் உரிமைகளையும், நலன்களையும் கடந்த 10 ஆண்டுகளாக பறித்து வந்த பாஜக ஆட்சிக்கு உரிய பாடத்தை புகட்டும் வகையில் இந்தியா கூட்டணியின் பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் திட்டமிட்டு மேற்கொண்டார். ராகுல்காந்தி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று இருவரும் ஆற்றிய உரைகள் தமிழக மக்களிடையே பெரும் மாற்றத்தையும், எழுச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஜனநாயக கடமையாற்றிய வாக்காளர்களுக்கு நன்றி.

The post ஜனநாயக கடமையாற்றிய வாக்காளர்களுக்கு நன்றி ராகுல், மு.க.ஸ்டாலின் பிரசாரம் மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தியது: செல்வப்பெருந்தகை அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Rahul ,M.K. Stalin ,Chennai ,Tamil ,Nadu ,Congress ,President ,Selvaperunthagai ,Tamil Nadu ,India ,M.K.Stal ,Dinakaran ,
× RELATED அமித்ஷாவுக்கு பாஜ நிர்வாகி எழுதிய கடிதத்தை வெளியிட்டு ராகுல் பிரசாரம்