- அண்ணாமலை சின்ன பிள்ளை
- சீமான் கிண்டல்
- சென்னை
- நாதம் தமிழர் கட்சி
- சீமான்
- கயல்விசி
- பள்ளி
- கபாலீஸ்வரர் நகர், நீலங்கர, சென்னை
சென்னை: சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரது மனைவி கயல்விழி வாக்கு செலுத்தினர். பின்னர் சீமான் அளித்த பேட்டியில், எங்களை எந்த அளவுக்கு சிதைக்க வதைக்க முடியுமோ அவ்வளவும் செய்கின்றனர். சின்னங்களில் குழப்பத்தை ஏற்படுத்தினர். சில இடங்களில் சுயேச்சைகளுக்கு எங்கள் சின்னம் பக்கத்தில் கரும்பு விவசாயி சின்னம் வைத்துள்ளனர். இது அம்பேத்கர் சொன்னதை போல அதிகாரம் மிக வலிமையானது, அது என்ன வேண்டுமானாலும் செய்யும் என்று கூறினார். தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல் போகும் என அண்ணாமலை சொல்லியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, இதற்கு என்ன பதில் சொல்வது, அண்ணாமலை சின்ன பிள்ளை, தம்பி ஆர்வத்தில் பேசுகிறார் என்றார்.
The post தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல் போகுமா அண்ணாமலை சின்ன பிள்ளை ஆர்வத்தில் பேசுகிறார்: சீமான் கிண்டல் appeared first on Dinakaran.