×

கடைகளில் மருந்துகள் விற்பதை தடை செய்ய வேண்டும்

பழநி, ஏப். 18: திண்டுக்கல் மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் களுக்கு தமிழ்நாடு மருந்தாளுனர் நலச்சங்கத்தினர் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: அனைத்து மருந்து கடைகளிலும் முழுநேர மருந்தாளுனர்கள் கண்டிப்பாக இருக்க ஆவண செய்ய வேண்டும். மருந்தின் தன்மை, வீரியம், அளவு போன்றவைகளை பற்றி தெரியாமல் மருந்துகளை விநியோகம் செய்யும் போலி மருந்தாளுனர்கள் மருந்துகள் கையாளுவதை தடை செய்ய வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்களில் விதிமுறையை மீறிய உரிமம் மற்றும் மருந்தாளுனர்கள் இல்லாத மருந்தகங்களின் மீது பாரபட்சமில்லாத நடவடிக்கை வேண்டும். மளி கை கடைகளில் மருந்துகள் விற்பணை செய்வதை தடுக்க வேண்டும்.

The post கடைகளில் மருந்துகள் விற்பதை தடை செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Palani ,Tamil Nadu Pharmacist Welfare Association ,Dindigul District Drug Control Inspectors ,Dinakaran ,
× RELATED கடைகளில் மருந்துகள் விற்பதை தடை செய்ய வேண்டும்