×

குண்டாஸில் வாலிபர் கைது

ராமநாதபுரம், ஏப்.18: ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரத்தில் கருணாகரன்(60)என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். அங்கு அப்பகுதியை சேர்ந்த மாந்தா(எ)மகேந்திரன்(31) என்பவர் 2 நண்பர்களுடன் சென்று கருணாகரனை அரிவாளை காட்டி மிரட்டி ரூ.7ஆயிரத்தை பறித்து சென்றனர். அப்போது அங்கு வந்த பெண்களையும் பார்த்து மிரட்டியுள்ளார். இதனை தொடர்ந்து வியாபாரி கருணாகரன் புகாரின் பேரில் திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிந்து மகேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பல வழக்குகளில் தொடர்புடைய மகேந்திரன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய எஸ்.பி சந்தீஷ் பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்திரவின் பேரில் மகேந்திரன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

The post குண்டாஸில் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Kundasal ,Ramanathapuram ,Karunakaran ,Regunathapuram ,Mantha (A) Mahendran ,Kundas ,
× RELATED சுட்டெரிக்கும் கோடை வெயிலால் ஐஸ் பார்கள் விற்பனை படுஜோர்