×

மக்களை வஞ்சிக்கும் மோடியின் பாஜக அரசை ஆட்சியில் இருந்து அகற்ற “கை” சின்னத்திற்கு வாக்களிப்பீர்: ஜோதிமணி அழைப்பு!!

கரூர்: மக்களை வஞ்சிக்கும் மோடியின் பாஜக அரசை ஆட்சியில் இருந்து அகற்ற “கை” சின்னத்திற்கு வாக்களிப்பீர் என்று கரூர் தொகுதி வேட்பாளர் ஜோதிமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்;

இந்தியனே வா!

புதிய இந்தியாவை உருவாக்க – மக்களை வஞ்சிக்கும் மோடியின் பாஜக அரசை ஆட்சியில் இருந்து அகற்றி, என்றும் மக்களின் உரிமையை நிலை நிறுத்தும் “கை” சின்னத்திற்கு வாக்களிப்பீர்!

கடந்த 5 ஆண்டுகளாக எனது சாதனை பயணத்தில் உடன் இருந்தும், நடந்த 2024 தேர்தல் வெற்றிப் பயணத்தில் மிகுந்த அன்போடும், மகிழ்ச்சியோடும் வரவேற்பு அளித்த கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தாய்மார்கள், பெரியோர்கள், சகோதர சகோதரிகள் மற்றும் வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக நடத்திய இந்தியா கூட்டணி நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடு காக்க – நாளைய தலைமுறை காக்க வாக்களிப்பீர் “கை” சின்னத்திற்கு

வெற்றி நமதே!. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post மக்களை வஞ்சிக்கும் மோடியின் பாஜக அரசை ஆட்சியில் இருந்து அகற்ற “கை” சின்னத்திற்கு வாக்களிப்பீர்: ஜோதிமணி அழைப்பு!! appeared first on Dinakaran.

Tags : Modi ,BJP government ,Jyotimani ,Karur ,Jyothimani ,India ,
× RELATED நேரடியாக எதிர்க்க முடியாமல் போலி...