×

திருப்போரூர் அருகே 50 டன் கட்டைகள் தீயில் எரிந்து நாசம்

திருப்போரூர்: திருப்போரூர் அருகே 50 டன் கட்டைகள் தீயில் எரிந்து நாசமாகின. இந்த தீ சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருப்போரூர் அடுத்த ஆலத்தூரில் சிட்கோ தொழிற்பேட்டை உள்ளது. இந்த வளாகத்தை சுத்தம் செய்யும் போது வெட்டப்பட்ட மரங்கள் காலி நிலத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இந்த இடத்தில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. இதில், தீ மளமளவென பரவி சுமார் 50 டன் கட்டைகள் தீயில் எரிந்து சாம்பலாயின. இதையடுத்து, மாமல்லபுரம் தீயணைப்பு படையினர் வந்து சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அடுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டைகளுக்கு தீ வைத்தது யார் என்பது குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post திருப்போரூர் அருகே 50 டன் கட்டைகள் தீயில் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Tiruporur ,Citco ,Alathur ,Dinakaran ,
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...