×

வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி முகாம்: கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆய்வு

 

ராமநாதபுரம், ஏப்.16: ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, ராமநாதபுரம், பரமக்குடி(தனி), முதுகுளத்தூர், திருவாடானை, அறந்தாங்கி, திருச்சுழி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு மைய அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி நேற்று நடைபெற்றது. முதுகுளத்தூர் தனியார் கல்லூரியில் நடைபெற்ற வாக்குப்பதிவு மைய அலுவலர்களுக்கான பயிற்சியை மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டார்.

அப்போது அலுவலர்களிடம் கூறும்போது, நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.19ம் தேதி நடைபெறுவதையொட்டி, பணிமேற்கொள்ளவுள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி நடைபெற்றது.  இதில் பங்கேற்றுள்ள அலுவலர்கள் பயிற்சியினை மேற்கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டும். ஏற்கனவே இரண்டு கட்ட பயிற்சியில் உங்களுக்கான பணிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது மூன்றாம் கட்ட பயிற்சி என்பது உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை தெளிவுபடுத்துவதே ஆகும். எனவே பயிற்சியில் சிறப்பு கவனம் எடுத்து தெரிந்து கொண்டு வாக்குப்பதிவு நடைபெறும் போது வாக்குப்பதிவு தொடர்பாகவோ படிவங்கள் பூர்த்தி செய்வது தொடர்பாக சந்தேகங்கள் இருந்தால் மண்டல அலுவலர்கள் மற்றும் தேர்தல் தொடர்பான அலுவலர்களிடம் போனில் பேசி சந்தேகங்களை சரி செய்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

சிறப்புடன் செயல்பட இந்த பயிற்சியை நல்ல முறையில் பயன்படுத்தி வாக்குப்பதிவு மையத்தில் உள்ள அலுவலர்கள் சிறப்பாக செயல்பட்டு தேர்தலை சிறப்புடன் நடத்தி முடித்திட உறுதுணையாக இருந்திட வேண்டுமென தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மாரிமுத்து,முதுகுளத்தூர் வட்டாட்சியர் சடையாண்டி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி முகாம்: கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Collector ,Vishnu Chandran ,Ramanathapuram ,Paramakkudy ,Separate ,Mudugulattur ,Thiruvadanai ,Aranthangi ,Thiruchuzhi ,Mudugulathur Private College ,Dinakaran ,
× RELATED சவூதி சிறையில் இருக்கும் மீனவரை மீட்க வேண்டும்