×

வடமாநில வாலிபர் மாயம்

 

ஈரோடு,ஏப்.16: ஒடிசா மாநிலம், பத்ரக் மாவட்டத்தை சேர்ந்தவர் கலாந்திபெகரா(36). திருமணமான இவர் ஈங்கூர் நல்லகவுண்டன்பாளையம் கிராமத்தில் தங்கி அங்குள்ள ஸ்டீல் கம்பெனி ஒன்றில் கம்பி கட்டும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 29ம்தேதி கலாந்தி பெகரா தான் தங்கி உள்ள அறைக்கு பக்கத்து அறையில் வசிக்கும் தொழிலாளி ஒருவரின் செல்போனை திருடியதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பாக அங்கிருந்தவர்கள் விசாரித்துள்ளனர். விசாரணையின் போது செல்போன் திருடியதை ஒப்புக்கொண்ட கலாந்தி பெகரா அங்கிருந்து திடீரென்று மாயமானார். இதையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்காததால் சகோதரர் கந்கோத்ரா பெகரா சென்னிமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வடமாநில வாலிபர் மாயம் appeared first on Dinakaran.

Tags : North State ,Erode ,Kalantibegara ,Badrak district, Odisha ,Nallakauntanpalayam ,Engur ,Kalanti ,Begara ,
× RELATED முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில்...