×

ஊத்துக்கோட்டையில் 3 இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அரசினர் மேல்நிலை பள்ளியில் 1994ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்களின் கூட்டமைப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்களின் கூட்டமைப்பு சார்பில், பொதுமக்களின் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் ஊத்துக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஏழுமலை கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர், மோர் வழங்கினார். இதில் கூட்டமைப்பைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் ஊத்துக்கோட்டை காவல்துறை சார்பில் காவல் நிலையம் முன்பு இன்ஸ்பெக்டர் ஏழுமலை தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். ஊத்துக்கோட்டை பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் சதீஷ் தலைமையில் தலைமை எழுத்தர் பங்கஜம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.

The post ஊத்துக்கோட்டையில் 3 இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Uthukottai ,Oothukottai ,Government Higher Secondary School ,
× RELATED கடமலைக்குண்டுவில் உலக பூமி தின விழிப்புணர்வு நிகழ்ச்சி