×

தேர்தல் பரப்புரைக்காக 8வது முறையாக தமிழ்நாடு வந்ததுள்ளார் பிரதமர் மோடி!

நெல்லை: தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வந்தடைந்தார். கேரளாவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி சற்று நேரத்தில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். நெல்லை, தென்காசி, விருதுநகர், குமரி, தூத்துக்குடி, விளவங்கோடு வேட்பாளர்களுக்காக பிரதமர் மோடி பரப்புரை மேற்கொள்கிறார். அரசு நிகழ்ச்சிகள், பிரசாரத்துக்காக பிரதமர் மோடி இந்த ஆண்டு, இதுவரை தமிழகத்துக்கு 7 முறை வந்துள்ளார்.

8-வது முறையாக மீண்டும் இன்று தமிழ்நாடு வந்துள்ளார். இன்று (ஏப்.15) திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட அகஸ்தியபுரத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜகவுக்கு ஆதரவு திரட்டவுள்ளார். இதைதொடரந்து, திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில் தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வந்தடைந்தார். விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

 

The post தேர்தல் பரப்புரைக்காக 8வது முறையாக தமிழ்நாடு வந்ததுள்ளார் பிரதமர் மோடி! appeared first on Dinakaran.

Tags : Modi ,Tamil Nadu ,Nellai ,Ambasamudram ,Nellie ,Kerala ,BJP ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...