×

சென்னையில் பிரபல நகைக் கடையில் 28.5 கிலோ தங்கக் காசுகளை வாங்கிவிட்டு ஏமாற்றியாக கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது புகார்..!!

சென்னை: சென்னை தியாகராயர் நகரில் பிரபல நகை கடையில் 28.5 கிலோ தங்கக் காசுகளை வாங்கிவிட்டு ஏமாற்றியாக கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் கணேஷ், சுவாமிநாதன் மீது நகைக் கடையின் மேலாளர் போலீசில் புகார் அளித்துள்ளார். கடந்த 2020 ஜூலை முதல் 2023 டிசம்பர் வரை 38.6 கிலோ தங்கக் காசுகளை சகோதரர்களான கணேஷ் மற்றும் சுவாமிநாதன் வாங்கியுள்ளனர். 9.47 கிலோ தங்கக் காசுக்கு மட்டும் பணம் கொடுத்த சகோதரர்கள் மீதமுள்ள 28.5 கிலோ தங்கக் காசுக்கு பணம் தராமல் ஏமாற்றியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது என்.ஏ.சி. நகைக் கடை மேலாளர் சந்தோஷ்குமார் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கும்பகோணத்தில் நிதிநிறுவனம் நடத்தி ரூ.600 கோடி மோசடி செய்ததாக சகோதரர்கள் கணேஷ் மீது சுவாமிநாதன் மீது வழக்குகள் உள்ளன. மோசடி வழக்குகளில் சிக்கியதால் கணேஷ் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டனர். நிதிநிறுவனம் நடத்தி சொந்தமாக ஹெலிகாப்டர் சகோதரர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

The post சென்னையில் பிரபல நகைக் கடையில் 28.5 கிலோ தங்கக் காசுகளை வாங்கிவிட்டு ஏமாற்றியாக கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது புகார்..!! appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Chennai ,Thiagarayar Nagar ,Ganesh ,Swaminathan ,
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...