×

பல்லடத்தில் 4 பேரை வெட்டிக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

திருப்பூர்: பல்லடத்தில் 4 பேரை வெட்டிக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளனர். 4 பேருக்கு  ஆயுள் தண்டனையுடன் தலா ரூ.1,000 அபராதமும் விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வெங்கடேஷ், சோனைமுத்து, செல்லமுத்து, அய்யப்பன் ஆகியோருக்கு நீதிமன்றம் தலா 4 ஆயுள் தண்டனை விதித்தது. வழக்கில் செல்வம் என்பவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு இழப்பீடு தரவும் உத்தரவு அளித்துள்ளது. பல்லடம் கள்ளக்கிணறு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கடந்த செப்டம்பரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். வீட்டின் அருகே மது அருந்தியதை தட்டிக் கேட்ட மோகன்ராஜ், அவரது தாய் உள்பட 4 பேர் படுகொலை செய்யப்பட்டனர்

The post பல்லடத்தில் 4 பேரை வெட்டிக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Palladam ,Tirupur ,Tirupur court ,Venkatesh ,Sonaimuthu ,Chelamuthu ,Ayyappan ,Dinakaran ,
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...