- மக்களவைத் தேர்தல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தலைமை தேர்தல் அதிகாரி
- சத்ய பிரதா சாஹு
- சென்னை
- தேர்தல் அலுவலர்
- சத்யா பிரதா சச்சு
- பூத் சிலிப்
- மக்களவை
- பிரச்சாரம்
- சத்யா பிரதா சாஹு
- தின மலர்
சென்னை: பூத் சிலிப் வழங்கும் பணி 92.80% நிறைவடைந்துள்ளது என தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.
நாளை மறுநாள் மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவு:
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மறுநாள் மாலை 6 மணியுடன் நிறைய பெறுகிறது என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டியில் தேர்தல் நடத்த தயார்:
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தயாராக இருக்கிறோம்.
தேர்தல் தொடர்பாக 4100 புகார்கள் வந்துள்ளன:
மக்களவை தேர்தல் தொடர்பாக சிவிஜில் மூலம் இதுவரை 4190க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.
பூத் சிலிப் வழங்கும் பணி 92.80% நிறைவு:
சென்னை உள்பட பல இடங்களில் பூத் சிலிப்புகள் இன்னும் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பூத் சிலிப் வழங்கும் பணி 92.80% நிறைவடைந்துள்ளது. பூத் சிலிப் இல்லை என்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம். நாளை மாலையுடன் பூத் சிலிப் கொடுக்கும் பணி நிறைவடையும். பூத் சிலிப் கிடைக்காதவர்கள் ஆன்லைனிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுபட்டவர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்குவது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
தேர்தல் பணியில் உள்ளோர் வாக்களிக்க நாளை கடைசிநாள்:
தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கான மையங்களில் தபால் வாக்களிக்க நாளை கடைசி நாள் ஆகும். தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி தபால் வாக்குகளை தபால் மூலமாக அனுப்ப முடியாது என தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு சாகு தெரிவித்துள்ளார்.
19ம் தேதி விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை:
தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்கும் என தலைமை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். 19ம் தேதி விடுமுறை இல்லை எனத் தெரிந்தால் 18ம் தேதியே புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் ஆணையத்தின் 1950 என்ற புகார் எண்ணுக்கு ஊழியர்கள் புகார் அளிக்கலாம். 17ம் தேதி மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை முடிவடையவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மறுநாள் மாலை 6 மணியுடன் நிறைவு: தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் appeared first on Dinakaran.